வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மாதர் சங்க மாநாட்டுப் பேரணி ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுப்பு





நாகர்கோவில், ஆக.13-

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14 வது குமரிமாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழ மையன்று பறக்கையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் லீமாறோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ரகுபதிவரவேற்றார். மாநில செயலாளர்கள்என்.உஷா பாசி, எஸ்.கே.பொன்னுத்தாய், மாநில துணைத்தலைவர் டி.ஆர்.மேரி, ஆகியோர் உரையாற்றினர். அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். வரவேற்புக்குழு பொருளாளர் உலகம்மாள் நன்றி கூறினார். முன்னதாக தெங்கம்புதூர் சந்திப்பிலிருந்து பறக்கை வரை ஆயிரக்கணக்கான மாதர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சாரதா பாய், எம்.மேரி எஸ்தர் ராணி,சுஜா ஜாஸ்பின், லலிதா, ஆனிடெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உ.பி.யில் 63 குழந்தைகள் பலியான துயரம் 5 நாட்கள் கண்டுகொள்ளாத யோகி ஆதித்யநாத்


தீக்கதிர் செய்தி
உ.வாசுகி 

குற்றச்சாட்டு
நாகர்கோவில், ஆக.13-
உத்தரப்பிரதேச அரசு மருத்து வமனையில் 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிர்ப்பலி ஆகும் வரை அம்மாநில முதல்வர் யோகிஆதித்யநாத் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக உ.வாசுகி குற்றம்சாட்டினார்.நாகர்கோவிலில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிக விலை வழங்குவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்களித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் விவசாய விரோத கொள்கையையே அமல் படுத்தி வருகின்றனர்.
கேஸ் மானியம் ரத்து செய்யப்படும் என அறிவித்த மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எதிர்ப்பு வந்த பிறகு கேஸ் மானிய ரத்து அறிவிப்பிலிருந்து பின் வாங்கி னார். தற்போது இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றாலும் அவர்கள் பின்பற்றும் நவீன தாராளமய கொள்கையின் ஒருபகுதியே மானியவெட்டு. எனவே இது மக்கள் தலையில் தொங்கும் கத்தியாக உள்ளது.50 சதவீதம் பேருக்குத்தான் ரேசன் வழங்கமுடியும் என்ற மத்திய அரசின்  முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. உணவுபாதுகாப்பு சட்டத்தின்படி ஒருகுடும்பத்தின் ஆண்டு வருமானம்1 லட்சம் ரூபாய் இருந்தால் ரேசன்பொருட்கள் வழங்கப்படாது எனக்கூ றுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என்றால்மாதத்திற்கு 8333 ரூபாய்.
இதனால்ஒரு குடும்பத்தில் 3 பேர் முறை சாரா தொழிலில் ஈடுபட்டு ஒவ்வொருவரும் மாதம் 3000 ரூபாய் சம்பா தித்தால் கூட உணவு மானியம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கார்ப்பரேட்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வாரி வழங்கும் போது சாதாரண ஏழை மக்களுக்கான மானியத்தை ரத்து செய்வது எந்த விதத்தில் சரியானது?மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தனது கட்சியை, இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கப் பட்டாலோ, கொல்லப்பட்டாலோ தமிழகம் கலவர பூமியாக மாறும் என கலவரத்தை தூண்டும் வகையில், பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இந்த பேச்சு பொறுப்பான பதவியில் இருக்கும் மத்தியஅமைச்சருக்கு அழகல்ல.மாநிலத்தில் கலவரத்தை ஏற் படுத்தும் நோக்கில் பேசிய மத்திய அமைச்சரை கண்டிக்காத தமிழக அரசு மக்களுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்துகிறது.
துண்டுப் பிரசுரம் வழங்குவதும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமா? இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்கிற கேள்வி தான் மக்கள் மத்தியில் எழுகிறது.கும்பகோணம் தீவிபத்தில் 94குழந்தைகள் பலியான வழக்கில்குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆகஸ்ட் 7 ந்தேதி முதல் 11 ந்தேதி வரை 63 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால் 5 தினங்களாக 63 குழந்தை கள் பலியாகும் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உண்மையை மூடி மறைக்காமல், யார் தவறு செய்தார்கள் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய வன்கொடுமைகள், சாதி ஆணவ கொலைகளை தடுக்க அரசு, வன்கொடுமை தடுப்பு சட்டம்இயற்றி அமல்படுத்த வேண்டும். மதுரையில் சாதி மறுத்து திருமணம் செய்ததற்காக பெற்றோரால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் விமலா தேவிக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கின் முதல்கட்ட தீர்ப்பில்,சாதி மறுத்து திருமணம் செய்யும் இளம்தம்பதிகளை சாதி ஆணவ கொலையிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கொண்ட சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தற்போது மதுரைமாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் சாதி ஒழிப்புக்காக, சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக அரசு சீர்திருத்த பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும். நாடு முழுவதும் பெண்களு க்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு எதிரானவன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள், வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரி த்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க,பெண்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017


அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடிட
மாதர் சங்க கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்கோவை, ஆக. 10 -

தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட 15 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 ஆவது கோவை மாவட்ட மாநாடு துடியலூர் கலைமணி நினைவரங்கில் வியாழனன்று பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாவட்ட தலைவர் எஸ்.அமுதா மற்றும் டி.விஜியா, பி.மோகனசுந்தரி தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் எஸ்.சாமூண்டீஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். மாநாட்டுஅறிக்கையை மாவட்ட செயலாளர் எ.ராதிகாவும் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜோதிமணியும் முன்வைத்தனர்.
முன்னதாக மாநாட்டை வாழ்த்தி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தீபக்சந்திரகாந்த் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் மாதர்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் மகளிர் பிரச்சனை குறித்து வரும் பெண்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யும், மகளிர் காவல்நிலையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். மாதர்சங்கத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாதுகாப்பாக குழந்தைகளுக்கு பால் புகட்டும் வகையில் பாலூட்டும் மையங்கள் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவராக அமுதா, செயலாளராக ராதிகா, பொருளாளராக ஜோதிமணி, துணைத்தலைவர்களாக ராஜலட்சுமி, பங்கஜவல்லி, சாமுண்டீஸ்வரி, துணைச்செயலாளர்களாக டி.விஜயா, ஆர்.சாந்தா, விஜயலட்சுமி மற்றும் 25 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம் உரையாற்றினார்.