நாகர்கோவில், ஆக.13-
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14 வது குமரிமாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழ மையன்று பறக்கையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் லீமாறோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ரகுபதிவரவேற்றார். மாநில செயலாளர்கள்என்.உஷா பாசி, எஸ்.கே.பொன்னுத்தாய், மாநில துணைத்தலைவர் டி.ஆர்.மேரி, ஆகியோர் உரையாற்றினர். அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். வரவேற்புக்குழு பொருளாளர் உலகம்மாள் நன்றி கூறினார். முன்னதாக தெங்கம்புதூர் சந்திப்பிலிருந்து பறக்கை வரை ஆயிரக்கணக்கான மாதர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சாரதா பாய், எம்.மேரி எஸ்தர் ராணி,சுஜா ஜாஸ்பின், லலிதா, ஆனிடெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக