வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

வியாழன், 1 ஜனவரி, 2015

கூலிப்படைகள் அதிகரித்துள்ள தமிழகத்தை அமைதிப்பூங்கா எனச்சொல்ல முடியுமா? மதுரை கூட்டத்தில் உ.வாசுகி கேள்வி



மதுரை,டிச.31-
தமிழகத்தில் குறிப்பாக மதுரை,சிவகங்கை, நெல்லையில் கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நெல்லையில் 25 நாட்களில் 30 கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியுமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21 வதுமாநாடு டிச-28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டினையொட்டி டிச-30 ம் தேதி பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது; சென்னையில் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இருபன்னாட்டு நிறுவனங்கள் தங்கள்ஆலைகளை திடீரென மூடியுள்ளன.
இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம், குடிநீர் மற்றும் வரிச்சலுகை வழங்கப்பட்டிருந்தன. இந்தசலுகைகளால் லாபம் அனுபவித்த பின்பு ஆலைகளை மூடியுள்ளனர். இந்தஆலைகள் மூடப்பட்டதில் மத்திய, மாநில அரசுகளுக்குப் பொறுப்பு இல்லையா? எதிர்காலத்தில் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய புரிந்துணர்வுக்கு கட்டுப்படும் நிறுவனங்களை மட்டுமே தொழில் தொடங்க அனுமதிக்க சட்டமியற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க சட்டமிருந்தும் நெல்லையில்சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகோபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட போது காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் பின்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமைகளுக்குப் பின்னால்தோழர் கோபி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோபியை படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திய போது, அரசு வேலை தவறான முன்னுதாரணம் எனக்கூறினார்கள். இது தான் சரியான முன்னுதாரணம் என்றுநாம் வலியுறுத்தியப் பின் அக்கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக மதுரை,சிவகங்கை, நெல்லையில் கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நெல்லையில் 25 நாட்களில் 30 கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியுமா?கூலிப்படைக்கும் காவல்துறையினருக்கும் பல மாவட்டங்களில் அண்டர்ஸ்டேண்டிங் இருப்பதாக வரும் புகார்களில் தெரிவிக்கப்படுகின்றன. இதன் மீது தமிழக அரசுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் வழக்கில் முதல் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட வரலாறு எங்கும் நடக்கவில்லை.
மேற்குவங்கம், கேரளா,திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுள்ளது. அரசியல் விரோதிகள் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல்குற்றச்சாட்டுக்களை சுமத்தமாட்டார்கள். ஊழலைப் பற்றி பேச ஒரேதகுதியுடைய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். ஊழலின்ஊற்றுக்கண் உலகமயம். ஊழலைஒழிக்கவேண்டுமானால் லோக்ஆயுக்தா கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மோடி தலைமையிலான 100 நாட்கள் ஆட்சியில் 4500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 45 ஆயிரத்திலிருந்து 55 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி உள்ளனர். முன்பிருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் நிலஉடமையாளர்கள் 80 சதவீதம் பேர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று இருந்தது.
ஆனால் மோடி அரசு, விவசாயிகள் அனுமதி தேவையில்லை என்றுபல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அந்நிய நேரடி மூலதனத்தை இதற்கு மேல் அனுமதிக்க வேண்டாம் எனநிதிக்குழுத்தலைவராக இருந்தபாஜகவைச் சேர்ந்த யஸ்வந்த் சின்கா கூறினார். இப்போது பாஜக அரசு, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதன உயர்விற்காக அவசரச்சட்டம் இயற்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. அத்துடன் பண்பாடு, மொழி மீது தாக்குதலைத்தொடுத்துள்ளது. இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தீக்கதிர்

1 கருத்து:

  1. வணக்கம் தோழர். இந்தப் பதிவில் -எழுத்துஅளவைச் சற்றே பெரிதாக்கிப் போடவேண்டுகிறேன். படிப்பதற்கே சிரமமாக இருக்கிறது. அதே போல, தீக்கதிரில் வெளிவந்த தேதி மற்றும் செய்தியனுப்பிய செய்தியாளர் பெயரையும் இடலாம். நன்றி.

    பதிலளிநீக்கு