புராதான
காலத்தில் அறி வியல் கண்டுபிடிப்புகள் இருந்ததாகக்கூறி, நமது விஞ்ஞானி
களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்துகிறது மோடி அரசு என
குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்
பினர் உ.வாசுகி.கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 12-வது மாநாடு புதுக்
கோட்டையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டு பேரணி - பொதுக்கூட்டத்தில்
அவர் பேசிய தாவது:-மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கணக்குப்படியே நாட்டில்
4600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். 60 ஆயிரத்திற்கும் அதிக
மானோர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திலேயே
சொன்னோம். காங்கிரசைவிட சிறப்பான ஆட்சியைக் கொடுக்க மோடியிடம் மந்திரக்கோல்
இல்லை. நாட்டிற்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல; கொள்கை மாற்றமே தீர்வு.
உளறல்கள்
விஞ்ஞானத்தையே
கேலிக் குரியதாக ஆக்கும் வகையில் பிற்போக்கான பாதையில் நாட்டை இழுத்துச்
செல்லப்பார்க்கிறது மோடி அரசு. நமது விஞ்ஞானிகள் நேரம் காலம் பார்க்காமல்
மூளையைக் கசக்கி உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கொச்சைப் படுத்தத்
தொடங்கியுள்ளனர் காவிக் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள். பிள்ளையார் சிலையை
காட்டி, புராதான காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாக நாட்டின் பிரதமரே
உளறு கிறார். மகாபாரத காலத்தில் தொலைக்காட்சி இருந்ததாகவும், நாடுவிட்டு
நாடு மட்டுமல்ல, கண்டம்விட்டு கண்டம் தாண்டும் விமானங்கள் இருந்ததாகவும்,
ஸ்டெம்செல் முறை யில் கவுரவர்கள் பிறந்ததாகவும் அறிவியல் மாநாட்டிலேயே
கட்டுரை வாசிக்கும் அளவிற்குத் துணிந்துவிட்டனர்.
இதை அனுமதித்தால்
பாடத்திட்டத்தையே மாற்றும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, குஜராத்தில் ஹிட்லரைப்
புகழ்ந்துஎழுதப்பட்ட பாடத்திட்டம் இருக்கிறது. நிரூபிக்கப்பட்ட உண்மைகளே
பாடத்திட்டங் களாக அமைய வேண்டுமே தவிர, வெறும் நம்பிக்கைகளைப் பாடங்களாக
ஆக்குவது அறிவியல் மனப்பான்மையைச் சிதைத்துவிடும்.சென்னைக்கு வந்த பாஜக
தலைவர் அமித்ஷா தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழகத்தில் தமது கட்சி ஆட்சிக்கு
வரவேண்டுமென்கிறார்.
அவர்கள்தான் இந்தியையும், சமஸ் கிருதத்தையும்
திணித்து தமிழைமட்டுமல்ல, நமதுகலாச்சாரத்தையும் பண் பாட்டையும் சிதைக்கப்
பார்க் கிறார்கள்.
போதை தெளிந்தால்....
மக்களை
போதையில் வைத்திருப்பதே தமிழக அரசின் ஒரே திட்டமாக உள்ளது. மக்களின் போதை
தெளிந்தால் அவர்களின் உயர்மட்ட ஊழல், ஆடம்பர வாழ்க்கை குறித்து கேள்வி
கேட்டுவிடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு. தமிழகத்தில் ஒரு ஆட்சி நடப்ப
தாகவே தெரியவில்லை.
கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமைகள் நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது.உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்கிற
அரசியல் தந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்களே
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முடியும்.இவ்வாறு உ.வாசுகி தனது
பேச்சில் குறிப்பிட்டார்.
(ந.நி.)
புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டுப் பேரணிப் பொதுக்கூட்டப் பேச்சையும் மறுநாள் பிரதிநிதிகள் மாநாட்டுத் தொடக்கவுரையையும் நேரில் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். தோழர் ஆர்.உமாநாத் அவர்களின் அழுத்தமான உச்சரிப்பு, இடையிடையே நடைமுறைத் தமிழில் கிண்டல், ஆழமான தகவல்கள். அதுவும் பிரதிநிதிகள் மாநாட்டில் ஃபார்மலான துவக்கவுரைக்குப் பதிலாக, இன்ஃபார்மலான, கிராமத்துப் படிப்பறிவில்லாத நம் விசுவாசத் தோழர்களுக்கு என்ன தேவை என்பதை மனதில்கொண்டு, அவர்களுக்கான விவாதத்தைக் ஊருக்குள் எப்படி அரசியல் பேசுவது, மாற்று அரசியல்கருத்துகளை எப்படி மறுப்பது என்று சொன்னீர்கள் பாருங்கள்... அருமையான சிந்தனை. இன்னும் கொஞ்சம் நடைமுறைத் தமிழை (பேச்சுமொழிநடையை) கூடுதலாக்கலாம் என்பது என் கருத்து. வாழ்த்துகளும் வணக்கங்களும் தோழர். பதிவுகளைத் தொடருங்கள். நன்றி
பதிலளிநீக்கு