திருச்சிராப்பள்ளி,பிப்.10-
ஸ்ரீரங்கம்
இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்
கே. அண்ணாதுரையை ஆதரித்து திங்களன்று மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,
அம்பேத்கர் நகர், அழகிரிபுரம், ரயில்வே பி கிராஸ், திருவானைக்காவல் ஆகிய
பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசிய
தாவது:- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவினர் பணம்கொடுத்து
வாக்கு கேட்கவேண் டிய அவசியம் என்ன? சொல்வதற்கு ஒன்றும் இல்லாததால்
பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்க முயற்சிக்கின்றனர். ஜெயலலிதாவின் இந்த
நிலைக்கு விதியோ, சதியோ காரணம் இல்லை. இது அவர்கள் மதி போன வழியில் வந்தது.
ஊழலுக்கு திமுக அஸ்திவாரம் போட்டது.
அதன்மேல் அதிமுக கட்டிடத்தை
கட்டிவருகிறது. `திருமங்கலம் பார்முலா’வை தமிழகம் முழுவதும் தப்பாமல்
அதிமுக செய்து வருகிறது. தமிழகத்தில் படித்த 90 லட்சம் பேருக்கு வேலை
இல்லை. இது போன்ற பல அடிப்படையான பிரச்சனைகளைப் பேசாமல் பணம் கொடுத்து
மக்களின் வாயை அடைத்து விடலாம் என்று நினைக்கின்றனர். தேர்தல் நேரத்தில்
மோடி கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம்
தருவேன் என்றார். ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய்கூட
கொடுக்க வில்லை. மற்ற கட்சிகளுக்கு பொதுத்தொகுதியில் தலித்களை நிறுத்த
தைரியம் உள்ளதா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சாதி, மதம்
பார்க்காமல் சட்டமன்றத்தில் மக்கள்பிரச்சனைகளை உரக்கப் பேசும் தகுதியுள்ள
திறமையான, மக்களுக்காக உழைக்கக்கூடியவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது.
எனவே
உங்களுக்காக உழைக்கக்கூடிய அண்ணாதுரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்
சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.வாக்கு சேகரிப்பின்
போது மாநிலக்குழு உறுப்பினர் கே.முகமது அலி, புறநகர் மாவட்ட செயலாளர்
ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சம்பத், ஜெயபால்,
ரேணுகா, நடராஜன், சிபிஐ தலைவர்கள் சுரேஷ், திராவிடமணி, பீர்முகமது உள்
ளிட்டோர் பங்கேற்றனர்.
Vankappora 55 vottukku pachhapparu... Try to plan for deposit back.....
பதிலளிநீக்குSeshan
திமுகவும் அதிமுகவும் பணம் கொடுத்து ஓட்டுக்கள் வாங்குவதை ஒரு நடைமுறைத் தொழிலாகவே செய்து வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் இதற்கு 'திருமங்கலம் ஃபார்முலா' என்று ஊடகங்கள் பெயர் வைத்து அழைப்பது தவறானது. இந்தப் பெயரைத் துரத்திக்கொண்டு சாதாரண பொதுஜனமும் மற்றவர்களும் ஓடுவது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல. ஆனால் உங்களைப் போல அரசியலிலும் பொதுத்தளத்திலும் செயலாற்றுபவர்கள், பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொண்டு மக்களுக்குச் சொல்கின்ற நிலையில் இருப்பவர்கள் அதனையே தொடர்வது சரியல்ல.
பதிலளிநீக்குகாரணம் இதுபோன்று வாக்காளர்களுக்குப் பணமும் பொருட்களும் கொடுத்து வாக்குகள் வாங்கும் நடைமுறையை முதன்முதலாக அமல் படுத்தி வெற்றிபெற்றவர் எம்ஜிஆர்தான். அவருடைய காலத்தில் நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் அதனை அவர் வெற்றிகரமாகவே செய்தார். மூக்குத்திகளும் எவர்சில்வர் குடங்களும் எம்ஜிஆரால் முதன்முதலாக வழங்கப்பட்டன.
எம்ஜிஆரின் அந்த ஃபார்முலாவைக் காப்பி அடித்தவர்தான் அழகிரி. திருமங்கலம் ஃபார்முலா என்று மட்டுமே ஆரம்பிப்பது எம்ஜிஆரின் மோசடியை வேண்டுமென்றே மறைக்கும் பாமரத்தனமான உத்தி.
அதற்கு உங்களைப் போன்றவர்களும் ஆளாகிவிடக்கூடாது.