மாதர் சங்கம் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம்
கோவை, டிச. 10- –
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம் கோவையில் செவ்வாயன்று நடைபெற்றது. டிசம்பர் 10ம் தேதியன்று மனித உரிமை நாளாக உலகம்முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் மீது தொடர்ந்து நடைபெறும் அத்துமீறல் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற முழக்கங்களை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் மனித உரிமை நாள் கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கோவைப்புதூரில் உள்ள சி.பி.முத்துசாமி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தீபக்சந்திரகாந்த் தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.அமுதா, மாணவர் சங்கத்தின் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். “பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள்” என்கிற தலைப்பில் மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.புனிதா, எ.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சி.ஜோதிமணி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
நன்றீ
தீக்கதிர்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம் கோவையில் செவ்வாயன்று நடைபெற்றது. டிசம்பர் 10ம் தேதியன்று மனித உரிமை நாளாக உலகம்முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் மீது தொடர்ந்து நடைபெறும் அத்துமீறல் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற முழக்கங்களை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் மனித உரிமை நாள் கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கோவைப்புதூரில் உள்ள சி.பி.முத்துசாமி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தீபக்சந்திரகாந்த் தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.அமுதா, மாணவர் சங்கத்தின் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். “பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள்” என்கிற தலைப்பில் மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.புனிதா, எ.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சி.ஜோதிமணி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
நன்றீ
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக