திருச்சி பொன்மலை சங்கத்திடலில் தோழர் பாப்பா உமாநாத் நினைவிடத்தில் உ.வாசுகி, எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி, டிச.17
தோழர் பாப்பா உமாநாத்தின் நினைவுதினத்தையொட்டி திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், கே.சி.பாண்டியன், அண்ணாதுரை, வி.வி.கிருஷ்ணமூர்த்தி, பகுதிசெயலாளர்கள் ஜெயபால்,கார்த்திகேயன், பழனியப்பன், வேளாங்கண்ணி ஆகியோர் மலர் வளையம் வைத்துமரியாதை செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் பணியாற்றிய, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு அடித்தளமிட்டு அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டதோழர் பாப்பா உமாநாத்தின் நினைவு தினம் புதனன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.
ஜனநாயக மாதர் சங்கம்சார்பில் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலச் செயலாளர்சுகந்தி, மாநில பொருளாளர் மல்லிகா, மாநிலநிர்வாகிகள் பொன்னுத்தாய், ஜோதிலெட்சுமி, பிரமிளா, மாலா, மாவட்ட செயலாளர் ரேணுகா, மாநகர செயலாளர் ரேணுகா மற்றும் நிர்வாகிகள் சித்ரா, புவனேஸ்வரி, ராணி, பாலாமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சிஐடியு மாநிலக்குழு சார்பில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மாநில துணைப் பொதுச்செயலாளர் கருமலையான், மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டத் தலைவர் சம்பத்,பெல் சிஐடியு சங்க அருணன்,சம்பத், இமானுவேல் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலைபகுதிக்குழு சார்பில் உறுப்பினர்கள் சீனிவாசன், முத்துகுமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கிழக்கு பகுதிக்குழு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் சிபிஎம்- சிஐடியு - மாதர் சங்கம் மரியாதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக