வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

செவ்வாய், 9 டிசம்பர், 2014

”என் வாழ்க்கை, என் உரிமை” -- > தீக்கதிர் கட்டுரை <--- (கட்டுரையாளர் உ.வாசுகி)




டிசம்பர் 10 மனித உரிமை தினம். பல்வேறு துறைகளில் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கங்களும், ஆர்வலர்களும் பல முழக்கங்களை முன்னெடுக்கும் நாள். பெண்களின் உரிமை குறித்தும் விவாதங்களும், கருத்துக்களும் இந்நாளில் முன்வைக்கப்படுகின்றன. காலம் மாறியிருக்கிறது, காட்சிகள் மாறியிருக்கின்றன, பல தடைகள் கடக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அதேசமயம் இன்னும் நீடிக்கும் முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில், உலகமயம் கோலோச்சும் சூழலில் ஏற்பட்டிருக்கும் பின் னடைவுகள் பரிசீலிக்கப்பட்டு, இலக்குகள் புதுப்பிக்கப்பட வேண்டும். போராட்டங்கள் வலுவடைய வேண்டும்.

அண்மைக்கால நிகழ்வுகளைப் பரிசீலித் தால் பொது வெளியில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்திருப்பது தெரியும். ஜனநாயக வெளிச்சம் படாமல் இருந்த எகிப்து, துனீசியா உள்ளிட்ட அரபு நாடுகளில் நிகழ்ந்த அரபு வசந்தம் என்ற போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு பேசப்படும் விதத்தில் இருந்தது. நாங்கள் 99 சதவீதம் என்ற குரல் தெறித்த வால் ஸ்ட்ரீட் போராட்டத்திலும் பெண்கள் பங்கு வலுவாக இருந்தது. இடதுசாரி கண்ணோட்டத்துடன் கூடிய அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட லத்தீன்அமெரிக்க நாடுகளில், அதற்கான தேர்தல் போராட்டக் களத்தில் பெண்களின் திட்ட வட்டமான ஆதரவு இருந்தது.
சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஐரோப்பிய நாடு களில் நடக்கும் மகத்தான வேலை நிறுத்தப் போராட்டங்களில் பெண் தொழிலாளிகளை முன் வரிசையில் பார்க்க முடிகிறது. கல்விக் கான போராட்டத்தில் பாகிஸ்தானில் மலாலா போன்றவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. ஆப்கானிஸ்தானத்திலும் தலிபான்களின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் பெண்கள் பேசத் துவங்கியுள்ளனர்.
தொடரும் பாகுபாடுகள்
இருப்பினும் ஒரு பக்கம் பாகுபாடுகள் தொடர்கின்றன. இரானில், பெண்கள் விளை யாட்டு நிகழ்வுகளுக்குப் பார்வையாளர்களாக வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து, ஆண்களின் வாலிபால் போட்டியைப் பார்க்க வந்த ஒரு குழுவில் இருந்ததற்காக, கோன்ச்செ கவாமி என்ற பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். தற்போது உடல்நலக் குறைவின் காரணமாகப் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று உலக அளவில் ஆதரவுக் குரல்கள் ஒலிக்கின்றன. அதே இரானில், 2007ல் தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தவரைத் தற்காப்புக்காகக் கொலை செய்த 19 வயது ரெஹானே ஜபாரி என்ற பெண் அண்மையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.இந்தியாவில் பெண்கள் இயக்கத்தின் வரலாறு நீண்டது; உயரிய பங்களிப்பை உள்ளடக்கியது. தேச விடுதலை போராட் டத்தில், தொழிலாளி விவசாயி இயக்கங்களில், சிவில் உரிமைக்கான போராட்டங்களில், பெண்ணுரிமைக்கான குரல் எடுப்பில் கணிசமாகப் பெண்களைக் காண்கிறோம். நிவாரணங்கள் கிடைக்கின்றன. இருப்பினும் பிரச்சனைகள் தொடர்கின்றன. மொத்தத்தில் இன்றும் பெண் சமமாக மதிக்கப்படுவதில்லை.
சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் இக்கருத்தியலுக்கும், அது சார்ந்த நடைமுறைக்கும் பின் உள்ளன. பெண் முழுமை யான மனிதராகக் கருதப்படாததால், அவ ளுக்கு சம அந்தஸ்தும், சுயேச்சையான செயல்பாடும் மறுக்கப்படுகிறது. யாருடைய கட்டுப் பாட்டுக்குள்ளேயோதான் நிரந்தரமாக வசிக்க வேண்டியிருக்கிறது. மநு கூறிய பெண்ணடிமைத்தனம் இன்று வரை புதுப்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.
சம கூலி இன்மை அல்லது பெண்ணின் பணிக்குக் குறைந்த ஊதியத்தை நிர்ணயம் செய்வது போன்றவை எல்லாமே ஒரு புறம் பாலினப் பாகுபாடாகவும், மறுபுறம் வர்க்க சுரண்டலாகவும் நிலவுகின்றன. கருணை நியமனத்தில் திருமணமான மகளுக்கு வேலை மறுக்கப்படுகிறது. ஆனால் மகனுக்குத் திருமணம் தடையாக இல்லை.
கைகள் போதுமே?
பெண் தான் வீட்டுப் பணிகள் செய்ய வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது. இது குறித்துக் கமலா பாசின் மிக அழகாகக் கூறுகிறார் “கருவைச் சுமக்க கருப்பை வேண்டும். அது பெண்ணிடம் மட்டுமே உள்ளது. அதை ஆண் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் வீட்டுப் பணிகளைச் செய்ய கருப்பை தேவையில்லை, கைகள் போதும், கைகள் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாமே? அது ஏன் பெண்ணின் மீது மட்டும் சுமத்தப்படுகிறது? இதில் தான் பாலின பாகுபாடு தெரிகிறது”. அவ்வாறு பெண் செய்கிற வீட்டுப் பணிக்கும் உரிய சமூக அந்தஸ்து கிடைப்பதில்லை.
பெண் இவ்வாறு கட்டிப்போடப்படுவது சமூக, பொருளாதார தளங்களில் அவளுக்கான சம வாய்ப்புகளை முடக்குகிறது. சின்ன சின்ன உரிமைகள் கூட சுலபமாகவோ இயல்பாகவோ கிடைத்துவிடுவது கிடையாது. என்ன படிக்க வேண்டும் என்பது பெண்ணின் விருப்பத்திற்கு விடப்படுவதில்லை. பெண்ணின் படிப்பு திருமணச் சந்தைக்கு உதவுமா என்றுதான் பார்க்கப்படுகிறது.என்ன உடை அணிவது என்பதையும் அவள் தீர்மானிக்க முடியாது.
ஆணை வசீகரிக் கும் விதத்தில் உடை அணியக் கூடாது என்பதே போதிக்கப்படுகிறது. பரஸ்பரம் ஈர்ப்புஎன்பது மனித இயலின் அம்சம். நாகரிக மதிப் பீடுகளுக்கு உட்பட்டு அதை வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வன்முறைக்குக் காரணம் பெண்ணின் உடை என்பது பலமட்டக் கருத்துக்களாக முன் வைக்கப்படுகிறது. இது பாலியல் குற்றங்களைக் குறைத்து மதிப்பிட வைக்கிறது. குற்றவாளி தப்பிக்க வழி வகுக்கிறது.
துணைக் கோளா?
குடும்பப் பொறுப்புகள், குழந்தை வளர்ப்புபோன்றவை பெண்ணுக்கு மட்டும் உரியகடமைகளாகக் கருதப்படுவதால், வேலைக்குப் போவதா வேண்டாமா, என்ன வேலைக் குப் போவது என்று முடிவெடுப்பதும் அவள்கையில் இல்லை. சமீபத்தில் ஒரு பிரபல மான கவிஞர் ஒரு கூட்டத்தில் பேசும் போது,ஒரு குடும்பம் பெண்ணை இழந்தால் பண் பாட்டை இழக்கிறது, ஆணை இழந்தால் பொருளாதாரத்தை இழக்கிறது என்று பேசி யிருக்கிறார்.
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சொன்னது போல், பெண் துணைக்கோளாகவே பார்க்கப்படுகிறாள்.யாருடன் நட்பு பாராட்டுவது, யாரை வாழ்க்கை துணையாகத் தேர்வு செய்வது என்பதற்கான கதவும் பெண் என்றால் மூடப்படுகிறது. சாதி தூய்மை, மதம் போன்ற தடைகள் அந்த உரிமையை முடக்குகின்றன. கௌரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. ஆண்-பெண் என்றாலே அது கணவன் மனைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வன்முறையை ஏவும் ஸ்ரீராம் சேனாவின் அட்டூழியங்களைப் பார்க்கிறோம். பொது இடம் என்று அழைக்கப்படும் கடற்கரை, ஹோட்டல், சினிமா தியேட்டர் போன்றவற்றுக்கு ஓர் ஆண் தனியாகப் போவதில் பிரச்சனையே இல்லை. ஆனால் பெண் தனியாகப் போனால், அதுதான் பிரச்சனையே.கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்ணுக்கு அவள் வாழ்க்கையைத் தேர்வுசெய்வது அவள் கையில் இல்லை.
எப்படி வாழ்வது, யாருடன் வாழ்வது, எங்கு போவது, யாருடன் போவது, என்ன படிப்பது, என்ன உடுத்துவது என்று முடிவெடுப்பதற்கான சுதந் திரம் 21ம் நூற்றாண்டிலும் மறுக்கப்படுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.
சுவாசிக்க வழி மறுக்கும் பண்பாட்டுச் சூழல்
எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தாற் போல, பெண்ணடிமைத்தன பண்பாட்டுச் சூழல் ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தும் பிஜேபி அரசால் நியாயப்படுத்தப்படுகிறது. வட மாநிலங்களில் அவர்களால் முன் வைக்கப்படும் லவ் ஜிஹாத்இவ்வகையைச் சேர்ந்ததுதான். சாதி பஞ்சாயத்துக்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது சங் பரிவாரத்தால் பயன்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் பாமக, கொங்கு அமைப்புகள் சாதிய படிநிலையைப் பாதுகாக்க, லவ் ஜிஹாத்தை நடத்திக் கொண்டிருக் கின்றன. பெண்ணின் திருமண வயது இதற்காக உயர்த்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன.
கொங்கு அமைப்பின் மாநாடு ஒன்றில், பெண் கம்ப்யூட்டர் படிக்கக் கூடாது, கம்ப்யூட்டர் படித்த பெண்ணை யாரும் திரு மணம் செய்து கொள்ளக் கூடாது என்று பேசப் பட்ட கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் இக் காலத்தில் முன்னுக்கு வந்தது. பெண்ணின் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலத்துக்குப் பின்னால் சாதிய, மதவாத, ஆணாதிக்க நிகழ்ச்சி நிரலே பளிச்சென்று தெரிகிறது.இத்தகைய மூச்சு திணற வைக்கும் பண் பாட்டுச் சூழலை நிராகரித்து, என் வாழ்க்கை என் உரிமை என்று சுதந்திரமாய் உரத்து சொல்லபெண்கள் முன்வர வேண்டும், அதற்கான சமூகச் சூழலை உருவாக்க முற்போக்காளர்கள் முயற்சிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து, நாடெங்கிலும் டிசம்பர் 10 மனிதஉரிமை தினத்தை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கடைப்பிடிக்கிறது.
குறிப்பாகக் கௌரவக் கொலைகளைத் தடுத்துநிறுத்த தனி சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் இப்பிரச்சாரத்தைக் கல்லூரி களுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப் பட்டிருக்கிறது.“கைகள் உயரட்டும் தலைகள் நிமிரட்டும்வானத்தில் ஒரு பாதி அங்கே அமரட்டும்”- சொல்லாத சேதிகள்

நன்றி 
தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக