தியாகிகள்
நினைவுச் சின்னத்திற்கு தலைவர்களும் மாநாட்டுப் பிரதிநிதிகளும்
அஞ்சலிசெலுத்திய பின்னர் காலை 10 மணிக்கு பொது மாநாட்டு நிகழ்ச்சிகள்
தொடங்கின. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ
தலைமையில் நடைபெற்ற பொதுமாநாட்டில் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும்
சட்டமன்ற உறுப்பினருமான க.பீம்ராவ் வரவேற்றுப்பேசினார். அஞ்சலி தீர்மானத்தை
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் முன்மொழிந்தார்.
இதனைத்
தொடர்ந்து மாநில மாநாட்டை தொடங்கிவைத்து கட்சியின் பொதுச் செயலாளர்
பிரகாஷ்காரத் சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் மாநாட்டை வாழ்த்திப்பேசினார். பொதுமாநாட்டில்
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், பிருந்தாகாரத்,
ஏ.கே.பத்மநாபன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
மத்தியக்குழு
உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன்,
கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், சுதா சுந்தரராமன், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலத்துணைத்தலைவர் கே.சுப்பராயன் மற்றும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள், கட்சி
ஊழியர்கள், பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்துகொண்டனர்.
நன்றி தீக்கதிர்
இந்தியாவில் கனவு காணும் உரிமை எல்லோருக்குமுண்டு உங்களுக்கு மட்டும் கிடையாதா ! குண்டு கல்யாணம்கூட முதல்வர் நாற்காலியில் உட்காரும் காலம் வரலாம் ஆனால் வரட்டு சித்தாந்தம் பேசி ஊழல் அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்கு இருக்கும் 10 சீட்டை காப்பாற்ற பாருங்கள்
பதிலளிநீக்கு