வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

புதன், 7 ஜூன், 2017

தீக்கதிர் செய்தி

சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சி

தில்லியில் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கோழைத்தனம

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புதுதில்லி, ஜூன் 7-தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்கஆர்எஸ்எஸ் குண்டர்கள் முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும்கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் ஜூன் 6, 7 தேதிகளில் தில்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை தொடர்ந்து மாலை சுமார் 3.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் மத்தியக் குழுஅலுவலகமான ஏ.கே.ஜி. பவனில்இரண்டாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருந்தசெய்தியாளர் சந்திப்புக்காக பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, பல்வேறு பத்திரிகையாளர்கள் புடைசூழ நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைப் போலவே உள்ளே நுழைந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள் 2 பேர், யெச்சூரியை பின்னாலிருந்து தாக்க முயற்சித்தனர்.
யெச்சூரிக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டே மிகவும் வெறித் தனத்துடன் அவர்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும்கட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யெச்சூரியை சூழ்ந்து கொண்டதால் அவர் கடும் தாக்குதலிலிருந்து தப்பினார்.அதன் பின்னர் மேற்படி குண் டர்கள் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ்சால் நடத் தப்படும் பாரதிய இந்து சபா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்திற்கு பின்னர், உடனடியாக, திட்டமிட்டபடி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் சீத்தாராம் யெச்சூரியும், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ.பேபி ஆகியோரும் பங்கேற்றனர்.யெச்சூரியை ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து கட்சியின் மத்தியக் குழுஅலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆர்எஸ்எஸ் குண்டர் களின் கோழைத்தனமான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் மனிதர் களைப் பார்த்து ஆர்எஸ்எஸ் அஞ்சுகிறது; அந்த அச்சத்தின் வெளிப் பாடாக தனது உண்மை முகத்தைக் காட்டுகிறது. ஜனநாயகத்தையும், மாற்றுக் கருத்தையும் எதிர் கொள்ளத் துணிவில்லாத ஆர்எஸ்எஸ் அமைப்பு கட்டவிழ்த்துவிடும் இத்தகைய தாக்குதல் முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஒருபோதும் தலைவணங்காது என்றும் அந்த செய்தியில் கூறப்பட் டுள்ளது.
சீத்தாராம் யெச்சூரி பேட்டி
தன் மீதான தாக்குதல் முயற்சிகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, “செய்தியாளர்கள் சந்திப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள், என்னைத் தாக்க முயற்சித்தது அப்பட்டமான கோழைத்தனம்” என்று சாடினார்.

கண்டனம் முழங்குக!
ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு



சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சங்பரிவாரத்தின் வழக்கமான கோழைத்தனங்களை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை, ஆர்எஸ்எஸ் குண்டர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் நுழைந்து தாக்க முயற்சித்துள்ளனர்.
தத்துவார்த்த ரீதியாக அம்பலப் பட்டுப் போயிருக்கும் சங்பரிவார், விமர்சனங்களை முன்வைப்பவரை நேரடியாகத்தாக்குவது அவர்களின் அவக்கேடான வரலாறாக இருக்கிறது. மகாத்மா காந்தி, கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் என்றுமாற்றுக் கருத்து சொல்லும் ஒவ்வொருவரையும் அவர்களது கருத்தை எதிர் கொள்ள முடியாததால் கொலை செய்வதுஎன்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தற்போது தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதலை நடத்த முயற்சித்திருக்கிறார்கள். சங்பரிவாரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்எளிய உறுப்பினர் கூட அஞ்சமாட்டார் கள். இன்னும் வேகத்துடனும், வீரியத்துடனும் சங்பரிவாரின் நாசகரக் கொள்கைகளையும், குணத்தையும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களும், ஆதரவாளர்களும் அம்பலப்படுத்துவார்கள்.
தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் அனைத்தும் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக கண்டன இயக்கங்களை வலுவாக நடத்திட வேண்டுமெனவும், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம்மக்களிடம் சங்பரிவாரின் இந்த அவக்கேடான செயலை அம்பலப்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.சீத்தாராம் யெச்சூரியை ஆர்எஸ்எஸ்குண்டர்கள் தாக்க முயற்சித்தார்கள் என்ற செய்தி, உடனடியாக நாடு முழுவதும் பரவியது. அரசியல் அரங்கிலும், கட்சி அணிகளின் மத்தியிலும் கடும் கண்டனத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியது. கேரளா உள்பட பல்வேறு இடங்களில் உடனடியாக ஆர்எஸ்எஸ் குண்டர் களுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.



காட்டுமிராண்டித்தனம்



விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கேட்ட 6 விவசாயிகளை சுட்டுவீழ்த்தியிருக்கிறது மத்தியப் பிரதேச பாஜகஅரசு. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து விவசாயிகளின் குரல்வளையை நெரித்திருக்கிறது. இந்த விவசாய விரோத காட்டுமிராண்டித்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் நபரே அதன் விலையை தீர்மானித்துக் கொள்ள முடியும். அது குளிர்பானங்கள் தொடங்கி காலணி வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதற்கான விலையை நிர்ணயிக்கின்றன. அதிலும் கூட லாபத்திற்கான உச்ச வரம்புகிடையாது. இஷ்டத்திற்கு விலை நிர்ணயம் செய்யலாம். இதனை முறையாக கண்காணிக்ககூட அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை. ஆனால் விவசாயிகள் மட்டும் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாது. அரசுதான் அதற்கான விலையை நிர்ணயிக்கும்.
அப்படி அரசு நிர்ணயிக்கும் விலை, விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்ய செலவிடும் தொகைகூட முழுமையாக கிடைப்பதில்லை. இதனால் சிறு,குறு விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாமல் தற்கொலை செய்து வருகின்ற அவலம் அனுதினமும் அரங்கேறுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகஅரசுதனது தேர்தல் அறிக்கையில், விவசாய விளைபொருளுக்கு உற்பத்தி செலவை விட ஒன்றரைமடங்கு விலை நிர்ணயம் செய்வோம். விவசாயஇடுபொருள்களை (உரம், பூச்சிக்கொல்லி, விதை) குறைந்த விலையில் கொடுப்போம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்திருந்தது. ஆனால், அதில் ஒன்றைக்கூட கடந்தமூன்றாண்டு கால மோடி அரசு நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளைத்தான் விவசாயிகள் நிறைவேற்றக் கோரி போராடுகின்றனர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 1ஆம்தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஆனால் மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செவிசாய்க்கவில்லை. இந்நிலையிலேயே மான்ட்சார் மாவட்டத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பாஜக அரசு காவல்துறையை ஏவி துப்பாக்கிச் சூடு நடத்தி 6 விவசாயிகளை துடிக்க துடிக்க படுகொலை செய்திருக்கிறது. ஆனால் ஆட்சியர் துப்பாக்கிச் சூடு உத்தரவுபிறப்பிக்கவில்லை என்கிறார். உள்துறை அமைச்சர் அப்படி நடக்கவில்லை என்கிறார்.முதல்வர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி என்கிறார். எப்படியாவது விவசாயிகளின் போராட்டத்தை மூடி மறைத்திட வேண்டும்என்பதிலேயே பாஜக அரசு குறியாக இருந்து வருகிறது.
போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் தற்போதுவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி விவசாயிகள் மாநில பாஜக மற்றும் மத்திய மோடி அரசை கண்டித்து வீரம் செறிந்த போராட்டத்தை தொடர்கின்றனர். துப்பாக்கிகளை காட்டி போராடும் விவசாயிகளை ஒடுக்கி விடலாம் என பாஜக தப்பு கணக்கு போட்டு வருகிறது. இன்னும் ரொம்பநாள் மக்களை ஏமாற்ற முடியாது. விவசாயிகளை வஞ்சித்துகார்ப்பரேட்களின் கைக்கூலியாக மாறிவரும் பாஜக அரசிற்கு விவசாயிகளின் வீரமிக்க போராட்டம் தக்க பாடம் புகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக