வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

புதன், 7 ஜூன், 2017


மதநெறியோடு பிறக்குமா குழந்தை?

தே.இலட்சுமணன்









அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான, வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. மேற்குவங்க குழந்தை உரிமைப் பாதுகாப்பு கமிஷன் (றுக்ஷஊஞசு) சட்ட அதிகாரி நாசிப் கான் தொடுத்த பொது நல வழக்கு தான் அது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுகாதாரப் பிரிவு "ஆரோக்கியா பாரத்" அமைப்பு பயிற்சிப்பட்டறை ஒன்று நடத்தியுள்ளது. அந்தப் பயிற்சிப் பட்டறையின் குறிக்கோள் ,கணவன் -மனைவியரை அழைத்து அவர்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் தருவார்களாம்.
அறிவுக்கு பொருந்தாத இப்பயிற்சியை தடுக்க வேண்டும் என்பதே வழக்கு!கருவிலேயே இருக்கிற குழந்தையை தூய்மைப்படுத்துவது இதன் உள்நோக்கம் கருவிலேயே குழந்தையை அறநெறியோடு இந்துமத நெறியோடு இந்துமத தூய்மையோடு குழந்தையை உருவாக்கி பிறக்க வைப்பது.அடுத்து கணவனை, மனைவியை அந்தத் தம்பதிகளின் மனப்பக்குவத்தை ஆய்ந்துபாரம்பரியமான இந்துத்துவ சடங்காச்சாரங்களைக் கற்றுக்கொடுத்து பிறக்கும் குழந்தைகளை தெய்வ உணர்வோடு இந்து மதநெறியோடு வளர்ப்பது என்ற பயிற்சியையும் தருவது.அதற்கு ஒரு படி மேலே போய் ஆண் பிள்ளைகளை எப்படி பெற்றெடுப்பது என்கிற பயிற்சியை சடங்குகளை, கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களை, உச்சரிக்க வேண்டிய மந்திரங்களையும் கற்றுக் கொடுப்பார்களாம். இது உண்மைதானா?வேதகால சாஸ்திரங்களில் ஆண் பிள்ளைகளை மட்டும் பெற்றெடுப்பதற்கு பயிற்சிகள்அளிக்கப்பட்டன.
மந்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. விரதங்கள் கடைப்பிடிக்கவும் கற்றுத் தரப்பட்டன. சேர்க்கையில் கூட இதற்கான செயல்முறைகள், சாஸ்திரங்கள் அருளப்பட்டன. தெய்வத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்பட்டன.அப்படியெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்கள் கடைப்பிடித்தும், மந்திரங்கள் ஒப்பித்தும் ஆண் பிள்ளை பிறக்கவில்லையென்றால் கடைப்பிடித்த அனுஷ்டானங்களில் ஏதோசில தவறுகள், குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆகவே, குழந்தை ஆணாக பிறக்கவில்லை என்று சமாதானம் கூறப்படுமாம்.இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும், இப்படி அறிவுக்குப் பொருந்தாத, நம்பிக்கை ஊட்டப்படுகிறது. மதநெறி உணர்வோடு எப்படி குழந்தை பிறக்க முடியும்.
சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து எப்படி ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்? ஆண் குழந்தை பிறப்பதற்கும், பெண் குழந்தைபிறப்பதற்கும் அடிப்படையான காரணங்களை விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டிய பின்னும், இப்படிப்பட்ட முட்டாள்தனத்தில் நம்பிக்கை வைக்க ஆர்எஸ்எஸ் மதத்தின் பெயரால் பயிற்சியும் பட்டறையும் நடத்தினால் அது தடுக்கப்பட வேண்டும்.பிறக்கின்ற குழந்தைகளுக்கு குழந்தை பருவத்திலிருந்தே, நம்புவது நல்ல குணம். என்று குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டுமாம். கேள்வி கேட்காது நம்புவது ஒரு நல்ல இயல்பு என சிறு பிள்ளையிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டுமாம்.இந்த அத்தனையும் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் போதிக்கப்படுகின்றன.
கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்க வேண்டும். மதிக்க வேண்டும். அதுதான் ‘ஒழுக்கத்தின்’ அடையாளமாகும். இந்த நோக்கத்தோடுதான் ஆர்எஸ்எஸ் பள்ளிக் கூடங்களை கல்லூரிகளை நடத்துகின்றன.இந்தியாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஆர்எஸ்எஸ் நடத்துகிறது. அதன் நேரிடையான அதிகாரத்திலோ அல்லது உதவியோடோ நடத்துகிறது. அப்பள்ளிகளில் கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களையெல்லாம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கக்கூடாது. இந்து மதம்தான் அனைத்துக்கும் மார்க்கம் என்றுதான் கற்பிக்கிறார்கள், உருவாக்கப்படுகிறார்கள். பிற மத துவேசம் கூட மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது.
இப்படிப்பட்ட சிந்தனை உருவாக்கத்தோடு லட்சக்கணக்கான குழந்தைகள் வெளிவருகிறார்கள் என்றால் இந்தியாவின் எதிர்காலம் என்ன?சிந்தனையாளர் பிளெய்ஸ் பாஸ்கல் சொன்னது நினைவுக்கு வருகிறது."மதநம்பிக்கையுடன் முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் தீமையை செய்வது போல்பிற நேரங்களில் அதை அவ்வாறு செய்யமாட்டார்கள்" என்றார். அதற்காகத் தான்ஆர்எஸ்எஸ் பள்ளிக்கூடங்களில் இளைஞர்களைத் தயார் செய்து அனுப்புகிறார்களா?ஆர்எஸ்எஸ் உறுப்பினர் மோடி - இந்தியபிரதமர் மோடி. மற்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் கவனத்தை இந்திய தாய்மார்கள் எப்படிப்பட்ட கதியில் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்று அவர்களின் கவனத்தை திருப்பி உருப்படியான காரியங்களை செய்ய வழிகாட்டமாட்டாரா? மாட்டார்.
காரணம் அவரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர். அகலமான இரண்டு கைகளையும் விரித்து மேடையில் வீர வசனம் பேசியே காலத்தை கழித்துவிடுவார் போலும். இந்திய கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களில் ரத்தசோகையோடு உள்ளோர் அனைத்து வகையான ரத்த சோகையையும் சேர்த்து 98 சதவீதம் பேர் உள்ளனர். இதுஅதிர்ச்சி தரும் செய்தி அல்லவா? ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருக்கும் நம்நாட்டின் பிரதமர் இந்த கொடுமையை நீக்க வழி என்ன சொல்கிறார்?பங்காளதேஷ், இந்தோனேசியா, நேபாளம், மாலத்தீவு , மியான்மர், ஸ்ரீலங்கா போன்றநாடுகளைவிட இந்தியாவில் ரத்தசோகை கர்ப்பிணிகள் அதிகம். இது இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் தரும் தகவல்.
இதனால் குழந்தைகள் பலவீனமாகப் பிறப்பது மட்டுமல்ல பேறுகாலத்தில் இறந்துபோகிற தாய்மார்களும் அதிகம். தலாக் விஷயத்தில் இஸ்லாமிய சகோதரிகளுக்காக கதறிய (வேசம்) பிரதமர் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?இந்தியாவில் குழந்தைகள் சத்துணவின்றி குறைவான எடையோடு பிறந்து வாழ்ந்து அதனால் நோய்வாய்ப்பட்டு சாவது என்பதுஅதிலும் 5 ஆண்டு எட்டுவதற்கு முன்பே லட்சக்கணக்கான குழந்தைகள் மாண்டுபோவது ஆறாத் துயரமல்லவா?நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்அங்கஸ்டியாடன் சொல்வது... "சிறு குழந்தைகள் ஊட்டக் குறைவால் அவதிக்குள்ளாவது இந்தியாவின் பெரிய பிரச்சனை.
வடகொரியாவைவிட, பங்களாதேசத்தைவிட, ஹைட்டி போன்ற நாடுகளைவிட இந்த விஷயத்தில் இந்தியா மோசம். ஊட்டசத்துக்குறைவால் தொற்றுநோய்கள் சுலபமாகப் பற்றிக்கொண்டு குழந்தைகள் இறந்து போகின்றன என்கிறார். கருவிலேயே மதநல்லுணர்வுடன் குழந்தை பிறக்கும் வித்தையை சொல்லும் ஆர்எஸ்எஸ் தலைவர் இதற்கு என்ன வழி சொல்லப் போகிறார்?".80 நாடுகளில் இது விஷயமாக கணக்கெடுத்ததில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. 5 வயதுக்குள்ளான 44 சதவீத குழந்தைகள் குறைந்த எடையோடு பிறந்து வாழ்கின்றன.72 சதவீத குழந்தைகள் ரத்த சோகையில் சோர்வுற்றிருக்கின்றன.
உலக வங்கி ஆய்வின்படிகூட உலகிலேயே குறைந்த ஊட்டச்சத்தால் அவதிப்படும் குழந்தைகள் உள்ள நாட்டில் இந்தியா மிக மோசம் என்கிறது. இந்த கொடுமை எல்லாம் ஆர்எஸ்எஸ் நபர்களுக்கு அதனுடைய இளைய அமைப்பான ஆரோக்கியா பாரத்திற்கு தெரியாது போலும்.குழந்தை பிறக்கும்போதே இந்துமத நெறியோடு ஒழுக்க சீலத்தோடு பிறக்க பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்கள். ஆண் குழந்தை பிறப்பதற்கு அதைவிட நுணுக்க போதனை செயல்வடிவம் தருகிறார்களாம்.நாசிம்கான் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கின் மீது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி ஒரு சாட்டை அடி.‘உங்கள் அமைப்பு மத நல்லொழுக்க குழந்தையாக பிறக்க நீங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைக்கு விஞ்ஞான அடிப்படையிலான நிரூபிக்கப்பட்ட ஆதாரம் சாட்சியம் ஏதேனும் உண்டா? அதை நிரூபிக்க முடியுமா’- என்றுகேட்டார்.
ஆனால் அவர்கள் அந்த அடிப்படையான விஞ்ஞான ஆதாரத்தையும் காட்டமுடியவில்லை. வழக்கம்போல நம்பிக்கைதான் என்கிறார்கள். ஒரு மோசடியான சமூகத்தை உருவாக்குவதற்கு இப்படியெல்லாம் திட்டம் தீட்டுகிறார்கள்.இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஸ்டீவன் வைன்பெர்க் சொன்னது... "நல்லவர்கள் நல்லன செய்வார்கள், தீயவர்கள் தீயன செய்வார்கள். இதற்கு இடையில் மதம்எதற்கு? ஆனால் நல்லவர்கள் தீயன செய்வதற்கு மதம் தேவைப்படுகிறது"- என்றார்.இந்துத்துவா வாதிகளுக்கு மதம் அதற்குத்தான் தேவைப்படுகிறது. அப்பாவிகளை தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை அந்த நல்லவர்களை தீயன செய்வதற்கு மதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.அறிஞர் ஸ்டீவன் வைன்பெர்க் சொன்னதுநூற்றுக்கு நூறு உண்மையே!


தமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்


02.06.2017
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் கோயம்புத்தூரில் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தீர்மானம்: 1
தமிழக மக்கள் உரிமைகளுக்கான
போராட்டத்தை வலுப்படுத்துவோம்
மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, உதய் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் நடவடிக்கை, சேலம் உருக்காலை உள்ளிட்டு பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு, தேச பொருளாதாரத்தையும், அனைத்துப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
ஜி.எஸ்.டி. சட்டத்தை பயன்படுத்தி சில பொருட்களுக்கு ஏற்கனவே 14 சதவிகிதமாக இருந்த வரியை 28 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து வணிகர்களும், மருந்து கடை வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
விவசாய விளைப் பொருட்களுக்கு அடக்க விiயுடன் 50 சதமானம் உயர்த்தி விலைகொடுப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறிவிட்டது. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்துள்ளது.
மத்திய பாஜக அரசு – சங்பரிவார் அமைப்புகளின் வகுப்புவாத நடவடிக்கை
நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் மீது பல மாநிலங்களில் சங்பரிவார் அமைப்புகள் தாக்குதல் தொடுக்கின்றனர். இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை சந்தைகளில் விற்பதற்கும், வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது. இது மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்பதோடு விவசாயிகளையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிபுரா மாநில அரசுகள் இதனை ஏற்க மாட்டோம் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ள அரசியல் பின்னணியில் இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவை ஆட்சேபித்த காரணத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சூரஜ் என்ற மாணவர் சங்பரிவார் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு
கடந்த மூன்றாண்டு காலமாக மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகவும், மாநில உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு திணிப்பு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமலாக்கிடும் முயற்சி, வர்தா புயலுக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் ரூ. 61000 கோடி மாநில அரசு மத்திய அரசிடம் நிதி கோரிய போது மத்திய அரசு வர்தா புயலுக்கு ரூ. 264.11 கோடியும், வறட்சிக்கு 1725 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது.  எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு தீர்மானித்து,இதுவரை எந்த அசைவும் இல்லை; பல்வேறு மத்திய அமைச்சகங்கள் தமிழகத்துக்கு சேர வேண்டிய ஒதுக்கீடு பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. மொத்தத்தில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் பாக்கி வைத்திருக்கும் தொகை ரூ. 16959 கோடி. 2015-16க்கான பயிர் காப்பீட்டு பிரீமியம் ரூ.168 கோடியை மத்திய அரசு உரிய நேரத்தில் செலுத்தாததால்  காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு தாமதமாக வழங்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்டு இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க பல வழிகளில் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.  பலத்த நிர்ப்பந்தத்துக்குப் பிறகு கீழடியில் அகழ்வாராய்ச்சியைத் தொடர மத்திய அரசு அனுமதித்தாலும் தொல்லியல் துறை அதிகாரி மாற்றம் உள்ளிட்ட  பல முட்டுக்கட்டைகளைப்  போட்டு சீர்குலைக்கிறது.
தமிழகத்தின் மோசமான நிலை
தமிழக பொருளாதார நிலைமை சமீப காலங்களில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமடைந்து வருகிறது. பருவமழை பற்றாக்குறையால் ஏற்பட்ட கடும் வறட்சி பாதிப்பு, வேளாண் உற்பத்தியும் விவசாயிகளின் வாழ்வும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 300 பேர் தற்கொலை (அ) மாரடைப்பால் இறந்துவிட்டனர். வேலையின்றி விவசாயத்தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதர கிராமப்புற கூலி உழைப்பாளிகளின் நிலைமையும் இதேதான். மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒருகுடம் தண்ணீர் ரூபாய் 5, 10/-க்கு விற்பனை ஆகும் நிலைமை உருவாகியுள்ளது. மாநிலத்தில் நிலவும்  பொருளாதார நெருக்கடியினால் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
தமிழக அரசின்  மொத்தக் கடன் வேகமாக அதிகரித்து வருகிறது. 2002-2003-இல் 43,815 கோடி ரூபாயாக இருந்த இக்கடன் 2018 மார்ச் மாத இறுதியில் இது 3,14,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாக உள்ளன. நியாயமான கோரிக்கைகளுக்காக ஜனநாயக அமைப்புகள் இயக்கம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. மக்கள் கோரிக்கைகளுக்காக போராடும் ஜனநாயக அமைப்புகளையும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று போராடக்கூடிய பெண்களையும் மூர்க்கத்தனமாக தாக்கும் காவல்துறை, கூலிப்படையினரின் மீதோ, சமூக விரோதிகள் மீதோ நடவடிக்கை எடுப்பதில்லை.
தனியார் கல்வி நிறுவனங்களில் தீர்மானிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலான கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன.
சேகர் ரெட்டி துவங்கி பல்வேறு அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்கள் வரை அமலாக்கத் துறை பிரிவு, வருமான வரி துறை பிரிவுகளின் ரெய்டுகள் இக்கால கட்டத்தில் நடந்தாலும், மேற்கொண்டு நடவடிக்கைகள் இல்லை. கறாராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தை விட, அதிமுகவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது. தலைமை செயலகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் ஆய்வு, துணை வேந்தர் நியமனங்களில் ஆளுநர் தலையீட்டின் அரசியல் போன்றவை அப்பட்டமாக பாஜகவின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.  மாநில உரிமைகள் மீறல், தமிழக நலனுக்கு துரோகம் போன்றவற்றைத் தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தம் அணிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மறுபுறத்தில், மாநில மக்கள் நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு எடுக்கும்  நடவடிக்கைகளை விமர்சிக்க ஓபிஎஸ் தலைமையிலான அணியும் தயாராக இல்லை.  மக்களின் நலனை விட, ஊழல் சாம்ராஜ்யமும், ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள பாஜகவுடன் தாஜா செய்து கொள்வதிலேயே அதிமுக இரண்டு அணிகளும் குறியாக உள்ளனர்.
மேற்கண்ட பின்னணியில் மத்திய பாஜக அரசின் மதவெறி மற்றும் நாசகர பொருளாதார நடவடிக்கைகளையும், தமிழகத்தை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழக அரசின் மக்கள் விரோத ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்தும், மாநில உரிமைகளை பாதுகாத்திடவும், தனியாகவும் இடதுசாரி கட்சிகள் மற்றும் இடதுசாரி மக்கள் அமைப்புடன் இணைந்து உருவாகியுள்ள தமிழக மக்கள் மேடையின் சார்பிலும், மக்கள் பிரச்சனைகளில் இணைந்து போராட முன்வரும் கட்சிகளுடன் இணைந்து வலுமிக்க போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
தீர்மானம் – 2
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய
மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுக
சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்க

தமிழகத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களும் குறிப்பாக பெண்கள் திரண்டு வலுமிக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் உட்பட குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல லட்சம் குடும்பங்கள் சொல்லொணா துயரத்தில் சிக்கித் தவிக்கின்றன. குடிப்பழக்கத்துக்கு ஆளான குடும்பத் தலைவர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைவதால் ஒவ்வொரு கிராமத்திலும் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்ப பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குடிப்பழக்கம் மோசமான கலாச்சார சீர்கேடுகளை உருவாக்கி பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
சமூக சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ள குடிப்பழக்கத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த கடைகளை கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் திறப்பதிலேயே அரசு குறியாக உள்ளது.
இந்நிலையில் இக்கடைகளை மூட வேண்டுமென போராடும் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராடிய மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். இவர்கள் மீது பொதுச் சொத்துக்கு சேதம் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் பலர் சிறையிலேயே தொடர்ந்து வாடும் நிலை உள்ளது.
குறிப்பாக நாகை மாவட்டம், செம்பனார் கோவில் கிராமத்தில் போராடிய 70க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை தாம்பரத்திலும் 20க்கும் மேற்பட்டோர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரம், ஆலமரத்துக்காட்டில் போராடிய 48 பேர் மீது வழக்குபோடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்டிபாடி தாலுகா, மதிகன் பகுதியில் போராடிய 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி ஆகிய இடங்களில் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்களை உடனடியாக வாபஸ் பெறுவதுடன், சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் மக்களின் எழுச்சிக்கு மதிப்பளித்தும், சட்டமன்றத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படியும், தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
– ஜிராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக