இந்திய மாணவர் சங்கத்தின் பெண் தோழர்கள் மீது மேற்கு வங்க காவல்துறை கொடூரமான தாக்குதல்! பிருந்தா கராத் எழுதிய கட்டுரை மூலம் விவரம் வெளிவந்துள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் மம்தா பானர்ஜி அரசு நடத்திய ஊழலைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது கடும் தடியடி. போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு மாணவிகள் கைது செய்யப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனை செய்யப்பட்டது. மாதவிடாய் என்பதால் உள்ளாடையை விட்டு விடுங்கள் என்று ஒரு மாணவி கெஞ்சிய பிறகும், உள்ளாடையும் சானிடரி நாப்கினும் அகற்றப் பட்ட கொடூரம் அரங்கேறியது. அரசை எதிர்த்து விடக் கூடாது, அதுவும் இடதுசாரி இளைஞர் அமைப்பு பலம் பெற்று விடக் கூடாது என்ற வெறித்தனத்தின் உச்சகட்டம். இப்படிப்பட்ட ஊழலில் காவல்துறையின் ஒரு பகுதிக்கும் பங்கு கிடைக்கிறது. எனவே எதிர்ப்புகள் ஒடுக்கப்படுகின்றன.
தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க பட்டுள்ளது. கண்டன இயக்கங்களும் நடக்கின்றன. எவ்வளவு ஒடுக்கினாலும் கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை செயல்பாட்டை நிறுத்தி விட முடியாது. இன்னும் இன்னும் போராட்டங்களை முன்னெடுப்போம். இப்படி ஊழல் எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்காக சமரசமின்றி போராடும் கம்யூனிஸ்டுகள் மீது, போராட்ட களத்தையே எட்டி பார்க்காதவர்கள் வண்டி வண்டியாக விமர்சன குப்பைகளை கொட்டும் நிலையை என்னவென்று சொல்வது!
-Vasuki Umanath
தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க பட்டுள்ளது. கண்டன இயக்கங்களும் நடக்கின்றன. எவ்வளவு ஒடுக்கினாலும் கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை செயல்பாட்டை நிறுத்தி விட முடியாது. இன்னும் இன்னும் போராட்டங்களை முன்னெடுப்போம். இப்படி ஊழல் எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்காக சமரசமின்றி போராடும் கம்யூனிஸ்டுகள் மீது, போராட்ட களத்தையே எட்டி பார்க்காதவர்கள் வண்டி வண்டியாக விமர்சன குப்பைகளை கொட்டும் நிலையை என்னவென்று சொல்வது!
-Vasuki Umanath
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக