சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதனை ஆதரித்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி 38வது வட்டம் பவர்அவுஸ் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதனை ஆதரித்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி 38வது வட்டம் பவர்அவுஸ் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
ஊழல் சாம்ராஜ்யத்தின் ஏகபோக முதலாளியாக சசிகலா அணியும் பன்னீர்செல்வம் அணியும் தமிழகத்தில் வலம் வருகின்றனர். ஒரு ஊழலுக்கு இன்னொரு ஊழல் எப்படி மாற்றாக அமையும். கிரானைட், மணல், கனிமவளம் கொள்ளை போனது சகாயத்தின் அறிக்கையில் வெளிவந்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெருத்தெருவாக ஓ.பன்னீர்செல்வம் பேசுவது எப்படி இருக்கிறது என்றால், முதல் மரியாதை திரைப்படத்தில், ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாணும் என்று சொல்லும் கதாபாத்திரம் போல் உள்ளது எனறார்.
முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்தபோது ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து விட்டு பதவியை ராஜினாமா செய்திருக்கலாம். தற்போது 10 விழுக்காடு உண்மையை மட்டுமே சொல்லியுள்ளதாகவும் இன்னும் 90 விழுக்காடு உண்மைகள் தன்னிடம் இருப்பதாக கூறும் அவர் ஏதோ டீலுக்கு அழைப்பது போல் தெரிகிறது. அம்மா உயிருக்கு என்னாச்சு என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தும் மோசமான அரசியல் பிரச்சாரம் ஆர்.கே.நகரில் நடக்கிறது.
தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. சேலத்தில் 80வயது மூதாட்டியும், கோவையில் 8 மாத பச்சிளங் குழந்தையும் சென்னை எர்ணாவூரில் 3 வயது ரித்திகாவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் பாதுகாப்பு, பொதுசுகாதாரம், நேர்மையான நிர்வாகம் அமைய தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும். ஆர்கேநகரில் களப்போராளியாக போட்டியிடும் ஆர்.லோகநாதனை ஆதரித்து சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். 38வது வட்டம் முழுவதும் இருசக்கரவாகனத்தில் நடைபெற்ற பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் திருமுருகன், கதிரவன், சத்தியராஜ், வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெண்ணின் தன்னம்பிக்கை, தைரியத்தை தகர்க்கும் ஆணாதிக்க கருத்துக்களை புறக்கணிப்போம்
மகளிர் தின கருத்தரங்கில் உ.வாசுகி பேச்சு
யார் அம்மா? சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. மற்ற மூவருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் என்றால், ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவரைத்தான் ‘அம்மா’ என்கிறார்கள். ஊழல் செய்தவரின் பெயரால் ‘அம்மா’ ஆட்சி நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ், தீபா என ஆளாளுக்கு கூறுகின்றனர். மறைமுகமாக ஊழல் ஆட்சி நடைபெறும் என்கிறார்கள்.மற்றொரு அம்மா இருக்கிறார். மாதர் சங்கத்தை நிறுவிய தலைவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காக மத்திய அரசு தாமிர பட்டயம், பென்சன் வழங்க முன்வந்தது. ‘‘அரசின் வெகுமதிக்காக போராடவில்லை, நாட்டின் விடுதலைக்காக போராடினோம்’’ என்று கூறி அவற்றை மறுத்தவர். இத்தகைய தியாகியான அவரை கவுரவிக்கும் வகையில் மாதர் சங்க மாநாட்டில் ஒரு பேனர் வைத்தோம். அதைப்பார்த்து கொந்தளித்துப்போன அவர், என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள் என்று குமுறினார். அவர்தான் கே.பி.ஜானகியம்மாள். ஊழல் செய்தவர் அம்மாவா? கே.பி.ஜானகியம்மாள் அம்மாவா?உ.வாசுகி பேசியதிலிருந்து...
சென்னை, மார்ச் 9-
பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் சீர் குலைக்க கருத்துக்கள் புறக்கணிக் கப்பட வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி கூறினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மனிதி, வீட்டு பணியாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இளம்பெண்கள் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து 107வது உலக மகளிர் தினமான புதன் கிழமையன்று (மார்ச் 8) எம்ஜிஆர் நகரில் கருத்தரங்கு நடத்தின.இதில் உரையாற்றிய உ.வாசுகி கூறியது வருமாறு:2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் அளித்தன. அந்தக் கடனை நிறுவனங்கள் திருப்பி செலுத்தவில்லை. இதனால் நிதி உறுதித்தன்மை சிதைந்து வங்கிக் கட்டமைப்பே சீர்குலையும் நிலை உருவானது.
இதனை சரிசெய்ய மக்களிடம் உள்ள பணத்தை வங்கிகளுக்கு கொண்டு வருவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணத்தை எடுத்து மக்கள் செலவிடுவதை தடுக்கும் வகையில் தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் படுகின்றன.சசிகலா மன்னார்குடி மாபியா என்றால், ஓ.பன்னீர்செல்வம் மணல் மாபியா. இவர்களிருவரும் ஜெயலலிதா மரணத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர். திமுக, அதிமுக ஆட்சியில் வரைமுறையின்றி கிரானைட் கொள்ளைகள் நடந்தன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியவர் பாஜகவை சேர்ந்த ரவிசங்கர் பிரசாத். இந்த நிலையில்தான் பாஜக ஊழலைப் பற்றிப் பேசுகிறது. இப்படி இவர்களனைவரும் மோசமாக அம்பலப்பட்டு நிற்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து மக்கள் சந்தேகத்தை தீர்க்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறிய ஓபிஎஸ் அதனைச் செய்யாதது ஏன்? இன்றுள்ள சூழலில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை விசாரித்தால் ஊழலில் இருவருமே சிறைக்கு செல்வார்கள்.தமிழகம் வறண்டு கிடக்கிறது. மேட்டூர் அணை கட்டியதிலிருந்து தூர் வாரவில்லை. ஒரு லாரி தண்ணீரை பிடிக்க 3 கிமீ தூரம் வரிசையில் மக்கள் நிற்கின்றனர். இந்தச் சூழலில் தினசரி கோக், பெப்சி கம்பெனிகள் 24 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க எப்படி தமிழக அரசு அனுமதிக்கிறது?இவ்வாறாக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஏழை, எளிய மக்களை பாதிப்பவையாக உள்ளன. இத்தகைய அரசியல் நிலைமைகள் ஒருபுறம் இருக்க, பொதுவெளியில் போராடி முன்னேறும் பெண்களை முடக்குவதற்காக அவர்களது தன்னம் பிக்கையை தகர்ப்பதற்காக ஆணாதிக்க கருத்துக்கள் பல வடிவங்களில் வருகின்றன. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்களை அவமதிப்பதும் அதன் ஒருபகுதிதான். இதற்கெதிராக இடதுசாரி அரசியலோடு ஒன்றிணைந்து போராட பெண்கள் சபதமேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
50 விழுக்காடு இடஒதுக்கீடு
சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பேசுகையில், “பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றனர். மாறியுள்ள காலச்சூழலில் 50 விழுக்காடு கோரி இனி போராட்டங்கள் நடைபெறும்” என்றார்.
“இந்தியாவிற்கே முன்மாதிரியாக கேரள அரசு பாலியல் குற்றச் சாட்டு பதிவேடு தனியாக பராமரிக் கப்படும் என்று அறிவித்துள்ளது. அதனை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்வாதி அமைப்பு தொடக்கம்இ
ந்நிகழ்வில் இளம்பெண்கள் அமைப்பு சார்பில் ஸ்வாதி (பெண் களுக்கான தற்காப்பு, பயிலரங்கம் மற்றும் முன்முயற்சிகள்) எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை உ.வாசுகி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பிச்சையம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அ.மரியாள், அபிநயா (மனிதி), ரா.ஜான்சி (மாணவர் சங்கம்), ரேகா (வாலிபர் சங்கம்), எஸ்.மனோன் மணி (மகளிர் சட்ட உதவி மையம்) உள்ளிட்டோர் பேசினர். மாதர் சங்க பகுதி செயலாளர் எம்.வேல்மணி நன்றி கூறினார். முன்னதாக மாவட்டப் பொருளாளர் வி.செல்வி வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக