வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

ஞாயிறு, 4 ஜூன், 2017

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – மதுக்கூர் ராமலிங்கம்

இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 ஆவது அமைப்புதினம் மற்றும் தமிழக தொழிற்சங்க தலைவர் கே.ரமணி அவர்களின் நூற்றாண்டு நிறைவுவிழா மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம் கோவையில் செவ்வாயன்று நடைபெற்றது. கோவை பீளமேடுபுதூர் மைதானத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று    இந்தியாவில் மதச்சார்பின்மை என்கிற தலைப்பில் தீக்கதிர் நாளிதழின் பொருப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதால்தான் ஒரேநாடாக இருக்கிறது. இல்லையென்றால் பலநூறு நாடுகளாக சிதறிப்போயிருக்கும். மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு இந்த நாட்டை துண்டாட வேண்டும் என்கிற சிந்தனை உள்ளது.
ஆனால் நமக்கு இந்த நாடு பிரிந்து போய்விடக்கூடாது என்கிற கவலையின் காரணமாகவே செங்கொடி இயக்கங்கள் இதுபோன்ற கருத்தரங்கங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. நமது பிரதமர் மோடி ஒருவிழாவில் பேசியபோது படேலை பிரதமாராக்காமல் நேருவை பிரதமாராக்கியதுதான் காந்தி செய்த தவறு என பேசினார். ஆனால் காந்தி தன் சொந்தமாநிலத்தை சேர்ந்த வர்னாசிரம கொள்கையை கடைபிடிக்கிற படேலை தேர்ந்தெடுக்காமல் மதநம்பிக்கையற்ற நேருவை பிரதமாராக வேண்டும் என காந்தி தேர்ந்தெடுத்தார். நேரு பிரதமாரக வந்ததும் மதச்சார்பற்ற தன்மையை கொண்டதாக இந்தியா இருப்பதும்தான் இன்றுவரை ஒரே தேசமாக நாடு இருப்பதற்கு அடிப்படை மதச்சார்பற்ற தத்துவம் தான்.
 இது இந்துத்துவ நாடாக அறிவிக்கப்பட்டிருந்தால் பலநூறு துண்டுகளாக சிதறிப்போயிருக்கும். நமக்கு ஒருநாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என அறிவித்துக்கொண்ட நாடு இன்றுவரை ஒரே நாடாக இருக்கிறது. ஆனால் மதம்சார்ந்த நாடு என அறிவித்துக்கொண்ட பாகிஸ்தான் இன்று இரண்டாக மாறிவிட்டது.  அது கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்று ஒரே மதத்தை பின்பற்றுவர்களாக இருந்தாலும் வேறுவேறு மொழியை பேசுகிறவர்களாகவும், இனப்பிரச்சனையாலும் பிரிந்துபோனது.மோடிக்கு நாட்டின் மீதான கவலையை விட மாட்டின் மீதுதான் கவலைதான் உள்ளது. இதனை எதிர்த்து கேரளத்தின் முதல்வர் கம்பீரமாக எழுப்பிய குரல் தமிழகத்தில் எழவில்லை. இநத் மாட்டுப்பிரச்சனை குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு உத்தரவு வரவில்லை, படிக்கவில்லை என்கிறார்.
எந்த உத்தரவு என்பது நமக்கு தெரியவில்லை.ஒருவேளை இதுகுறித்து கருத்து சொல்ல பிரதமர் எந்த உத்தரவும் இவருக்கு விடவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது. மோடியின் காலை பிடிப்பது யார் என்று இரண்டு அணிகளும் போட்டி போடுகிறது. எடப்பாடி  படிக்கிறாறோ இல்லையோ மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளையில் மாண்மிகு நீதிமான்கள் ஆழமாக படித்துப்பார்த்து மோடியின் உத்தரவுக்கு நாடு முழுவதும் தடைவிதித்திருக்கிறது. சமீபத்தில் இந்த நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒன்று நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடை, இரண்டு மாட்டிறைச்சி விவகாரத்தில் மோடி அரசின் அறிவிப்புக்குத்தடை. இதனை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்  வரவேற்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் வள்ளுவம். ஆனால் இப்போது மோடி அரசு பகவத் கீதையை கட்டாய பாடமாக்குவேன் என்கிறது.
இந்த பகவத் கீதையில் நான்கு வர்னங்களையும் நான்தான் படைத்தேன் அதனை நான் நினைத்தாலும் மாற்றமுடியாது என்று பகவான் சொன்னதாக இவர்கள் எழுதிவைத்து சொல்கிறார்கள். அதில், பெண்கள் பாவ யோனியில் பிறந்த பாவப்பட்டவர்கள் என்கிறது. இந்த பகவத்கீதையைத்தான் பாடத்திட்டத்தில் சொல்லித்தரப்போகிறார்களா என கேள்வி எழுப்பினார். மேலும், அவர்பேசுகையில், பரிமேல் அழகரை காட்டிலும் அதிகாமன நட்பு உள்ளதாக பாஜகவின் தருன்விஜய் காட்டிக்கொள்கிறார். ஆனால் இவர்தான் நாங்கள் மிகுந்த சகிப்புத்தன்மை பெற்றவர்கள் ஆகவே தென்னிந்திய கருப்பர்களோடு சேர்ந்து வாழவில்லையா என்கிறார். இன்னொருவர் எச்.ராஜா  மாட்டுக்கறியைவிட நாய்க்கறி சாப்பிடுங்கள் என்கிறார். அர்ஜூன்சம்பத் என்பவர் பன்றிக்கறி சாப்பிடுவேன் என்கிறார். வீரத்துறவி என தன்னை அறிவித்துக்கொண்ட ராமகோபாலன் மனிதமலத்தை சாப்பிடுங்கள் என்கிறார்.
அதனால்தான் எங்கள் பேராசிரியர் அருணன் யார்யாருக்கு எது பிரியமோ அதனை சாப்பிடுங்கள் எனக்கு மாட்டுக்கறி பிடிக்கும் நான் சாப்பிடுகிறேன்  என்றார். இப்படித்தான் இவர்களுக்கு பதில்சொல்ல வேண்டியுள்ளது. அசைவ உணவு சாப்பிட்டு ஆகவேண்டும் என யாரையும் நாங்கள் கட்டாய்ப்படுத்தப்படவில்லை அதேநேரத்தில் எனது உணவு உரிமையும் பறிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.  சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மாடுகள் மீது கருனை காட்டுபவதாக சொல்லும் இவர்கள் மனிதர்கள் மீது இந்த கருனையை காட்ட மறுப்பது ஏன் என்றார். இதேபோல இவர்களின் தலித் பாசமும் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தலித் வீட்டில் சாப்பிட்டால் தலித்மக்களின் ஆதரவைப்பெறலாம் என யாரே சொல்லக்கேட்டு ஊழலுக்கு பெயர் பெற்ற கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலித் வீட்டிற்கு சரவணபவன் ஓட்டலில் இட்லியை பார்சல் எடுத்துப்போய் தலித் வீட்டில் சாப்பிடுகிறார். இன்னொருவர் உத்திரபிரதேச முதல்வர் தலித் மக்களிடம் சோப்பு,சேம்பு கொடுத்து நன்றாக குளிக்கவைத்துவிட்டு பிறகு சந்தித்துள்ளார். இதுதான் இவர்களின் தலித் பாசம்.
அரசும் மதமும் தள்ளி இருக்க வேண்டும். அதுதான் மதச்சார்பற்ற அரசு, மதம் என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை, ஆனால் இவர்கள் பொட்டுக்கும், மஞ்சலுக்கும் வரிவிலக்கு அளித்துவிட்டு, பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான நாப்கினுக்கு வாரி உயர்வை அறிவித்திருக்கிறார்கள். மேலும், ஆபாச  புத்தகங்களுக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு குழந்தைகள் வரையும் ஓவிய புத்தகத்திற்கு 12 சதவீத வரி உயர்வு அளித்திருக்கிறார்கள். இதுதான் இவர்களின் ஆட்சி.
இந்தியாவின் பன்மைத்துவம்தான் அழகு  அதுதான் நமது பாரம்பரியம் ஒரு வேட்டி கட்டுவதுகூட ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி கட்டுவார்கள். மதச்சார்மை நாடாக இருப்பதுதான் நமது பெறுமை. சாமிகளில் இரண்டுவகை உள்ளது. சர்க்கரை பொங்கள் சாப்பிடுகிற சாமியும், கறிக்கஞ்சி குடிக்கும் சாமியும் உள்ளது. தற்போதுள்ள வறட்சி போன்ற நெருக்கடியின் காரணமாக குலசாமியை கும்பிடுவதற்குகூட ஆள் இல்லை வேலைக்காக திருப்பூர் போன்ற மாவட்டங்குளுக்கு வந்துவிட்டார்கள்.
வைகை அழகர் கோரிப்பாளையத்தில் உள்ள மசூதியின் மண்டகப்படிக்கும் சென்றுவிட்டுத்தான் அழகர் ஆற்றில் இறங்குவர். சமீபத்தில் போராட்டக்களம் ஒன்றில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது மழை வந்துவிட்டது. அவர்களின் தொழுகை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தாங்கள் அமர்ந்திருந்த ஜமக்காளத்தை எடுத்து பந்தல்போல் அமைத்து அவர்களின் தொழுகைக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தார்கள் இதுதான் நமது பாரம்பரியம். ஆனால் இவற்றிற்கு மாறாக இஸ்லாமியர்களை எப்போதும் பதட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம்.  மக்கள் தொகைக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஆனால் சிறைச்சாலையில் அதிக எண்ணிக்கையில் எந்த குற்றவழக்கும் நிருபிக்கப்படாமல் விசாரனை கைதிகாளக அடைக்கப்பட்டுள்ளனர் என ஒரு இந்து நீதிபதி ராஜேந்திரசச்சார் குழு ஆய்வை அரசிடம் சமர்த்திருக்கிறது.
கொல்லாமை என்பதும் புலால் உண்ணாமை என்பதும் இவர்களின் தத்துவமல்ல மாறாக இவர்கள்தான் யானை உள்ளிட்டு யாகத்தில் போட்டு எரித்தவர்கள். விவசாயத்திற்கு கால்நடைகளே இல்லாமல் போய்விடுமோ என்கிற நிலையில்தான் புத்தமும், சமனமும் புலால் உண்ணாமையை போதித்தது என்பது வரலாறு. ஆனால் தங்களின் மூன்றாண்டு கால ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கு பாசிச தத்துவத்தின் பேரால் மக்களை பிரிக்க நினைக்கிறார்கள். இந்திய மதச்சார்பற்ற நாடாக இருக்கிறபோதுதான் இந்த ஒற்றுமை நிலைக்கும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக சிறை சென்றவர்கள் இந்த மேடையின் சொந்தக்காரர்கள். ஆனால் இவர்கள் ஒருவரையாவது சுதந்திரபோராட்டத்தில் பங்கேற்றவர்களை காட்ட முடியுமா.விடுதலைபோராட்டத்தின் பாரம்பரியம் உள்ள தலைவர்களை பெற்றிருக்கிற எங்கள் மீது தேசதுரோகி பட்டம் கட்டுகிறார்கள்.  இதுதேசபக்கத மேடை இந்த ஒற்றுமையை பாதுகாக்க எங்கள் உயிரைகொடுத்தாவது காப்போம் என 
மதுக்கூர் ராமலிங்கம் நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக