சென்னை,
யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை முன்வைத்து செயல்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை முன்வைத்து செயல்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
மத்திய- மாநில அரசுகளின் தொழிலாளர் , மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதி 52வது வட்டம் ஆடுதொட்டியில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம்,செல்வானந்தம், டி.வெங்கட், பவானி, முனியாண்டி, அந்தோனி ஆகியோர் பேசினர். கடைசியாக உ.வாசுகி சிறப்புரையாற்றுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஒப்பிட்டளவில் சிறிய கட்சியாக இருக்கலாம் ஆனால் மக்கள் இயக்கம் நடத்துவதிலும் எளிய மக்களின் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண்பதில் எந்த பெரிய அரசியல் கட்சிக்கும் சளைத்தது இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது. யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்கான கொள்கைகளை முன்வைத்து வரவேண்டும் என்றார்.
காவல்துறையினரின் பொய்வழக்குகள் என பல இன்னல்களுக்கு மத்தியில் இடதுசாரிகள் மக்களுக்காக தொடர் போராட்டங்கள் நடத்தி வெற்றியும் பெற்றுவருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. ஆண்டிற்கு ஒருகோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய மோடி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 4லட்சத்திற்கும் குறைவானவர்களுக்கே வேலை அளித்துள்ளது. 17வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி திருப்பித்தராமல் மத்தியஆட்சியாளர்கள் லண்டனுக்கு தப்பவிடுகின்றனர். மோடியின் நெருங்கிய நண்பர் அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகள் 75ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசு கடனை திருப்பி செலுத்தாத நிலை உள்ளது. இந்தியவங்கிகளுக்கு சொந்தமான ஒன்னறை லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஏமாற்றி விட்டு உல்லாசமாக இருக்கும் தேசத்தில் ஒரு விவசாயி கடனுக்காக உயிரை மாய்த்துக்கொள்கிறார். கல்விக்கடன் கிடைக்காத மாணவரும், விவசாயக்கடன் கிடைக்காத விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
ரேசன்கடைகளில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை. நூறுநாள் வேலை செய்யும் மக்கள் ரேசன் அரிசியை நம்பித்தான் இருக்கின்றனர். உணவு பாதுகாப்பு சட்டம் சாமான்ய மக்களுக்கான சட்டமாக இல்லை. காவேரி நீர் பெற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் நீட் தேர்வு என்ற பெயரில் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்தியஅரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்.
டாஸ்மாக் பிரச்சனை, தலித்பெண்கள், சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது , சட்டஒழுங்கு பாதிப்பு, சாமியார் லீலைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி ஓபிஎஸ் வாய் திறக்காதது ஏன், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் தோழர்கள் மீது பொய்வழக்கு போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்
வாசுகி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக